சனி, 9 பிப்ரவரி, 2013

சூரியப் புயல் (Solar Storms)

பூமியின் வடதுருவத்தில்  உள்ள அயர்லாந்து, இங்கிலாந்தின் வட பகுதியான ஸ்காட்லாந்து, நார்வே ஆகிய நாடுகளை காந்த புயல் தாக்கியிருக்கிறது.. தாக்கும்போது வானில் நீலம்-பச்சை நிறம் கலந்த ஒளி வெள்ளம் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது... மின்னல்  ஒளிபோலவும், வானத்தில் ஒளி பாய்ச்சுவது போன்ற தோற்றத்தில் காந்தப்புயல் தாக்கியத்தாக தகவல்கள் வெளிவந்திருக்கிறது. நாம் முன்னரே சூரிய பார்த்த சூரியப் பயுல் பூமியைத் தாக்கும் அபாயம் என்ற பதிவில் சூரியப் புயல் என்றால் என்ன என்று பார்த்திருந்தோம்.


The solar Storm
சூரியப் புயலின் வெளிப்பாடு..

உலகம் அழிந்துவிடுமா? என்பன போன்ற பலவிதமான தகவல்களால் உலக மக்களிடையே பீதியை கிளப்பிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த சூரியப்புயலானது சற்றே அச்சத்தை வரவழைத்துள்ளது.

இந்நிலையில் சூரியப் புயலின் தாக்கம் பூமியின் வடமுனையில் இருக்கிற நாடுகளில் தாக்கியிருப்பதால், அங்கு விமானப் போக்குவரத்தை மாற்றி அமைத்துள்ளனர்.  சூரியனில் ஏற்பட்ட கரோனா பிளாஸ்மா கதிர்வீச்சானது பூமியை வந்தடைந்துவிட்டதாக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Scientist Richard Fisher

பூமியின் வடமுனையில் உள்ள அயர்லாந்து, இங்கிலாந்தின் வட பகுதியான ஸ்காட்லாந்து, நார்வே ஆகிய நாடுகளை காந்த புயல் தாக்கியது. அப்போது வானில் நீலம்-பச்சை(blue-green Rays) நிறம் கலந்த ஒளி வெள்ளம் காணப்பட்டது. மின்னல் ஒளித் தாக்கத்தை போன்ற ஒளி வெள்ளம் காணப்பட்ட காந்தப்புயல் தாக்கியது.

இந்நிகழ்வை  விஞ்ஞானிகள் அதிநவீன டெலஸ்கோப் மூலம் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர். பூமியின் வடமுனையில் வருடந்தோறும் செப்டம்பர், அக்டோபர், மார்ச், மற்றும் ஏப்ரல் மாதங்களில் இது போன்ற ஒளிவெள்ளம் தோன்றுவது வழக்கம். என்றாலும் இந்த முறை சூரிய காந்த புயலால் ஜனவரி மாதத்தில் இந்த ஒளி வெள்ளக்காட்சி தோன்றியதாக தேசிய பெருங்கடல் மற்றும் வளி மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 விமான பாதை மாற்றியமைப்பு(Adjustment to the flight path:):

சூரிய காந்த புயல் கதிர் வீச்சால் பூமியின் வடமுனையில் தகவல் தொடர்பு பாதிக்கப்படலாம் என கருதி அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆங்காங், ஷாங்காய், சியோல் ஆகிய நகரங்களில் இருந்து வரும் விமானங்களை தென் பகுதி வழியாக வரும்படி பாதைகளை மாற்றியுள்ளது.

சூரிய புயல்(Solar storms:):

 சூரியனில் உள்ள வாயுக்கள் காரணமாக சூரியன் தொடர்ந்து இடைவிடாது எரிந்து கொண்டிருக்கிறது. அதில் ஏற்படும் வெப்பம், பூமியை எட்டுவதால் தான் பூமியில் வெப்பம் ஏற்படுகிறது. இதே போல சூரியன் எரிவதால் ஏற்படும் வெளிச்சத்தால்தான் நமக்கு பகலில் வெளிச்சம் கிடைக்கிறது.. சூரியன் நீண்ட தூரம் இருப்பதால் சூரியனின் வெப்பம் மிக குறைந்த அளவு மட்டுமே பூமிக்கு வருகிறது. இதனால்தான் பூமியில் உயிரினங்கள் வாழ முடிகின்றன. சூரியனிலிருந்து பூமிக்கு வரும் வெப்பம் கொஞ்சம் அதிகரித்தாலும் கூட அது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும்.


இது போன்ற சூழ்நிலையில்தான் ஆகஸ்ட் 1ம் தேதி காலை சூரியனின் மேல் பகுதியில் அணுகுண்டு வெடிப்பது போன்று 2 முறை மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வெடிப்பானது  பூமி உருண்டையின் அளவைவிட சற்று அதிகமாக இருந்தது.. அடுத்து சில நிமிடங்களில் ஏற்பட்ட வெடிப்பு முதல் வெடிப்பை சற்று சிறியதாக இருந்தது. இந்நிகழ்வை நாசா விஞ்ஞானிகள் நவீன டெலஸ்கோப் மூலம் படம் பிடித்து உள்ளனர். வெடிப்பின் போது பயங்கர வெப்பம் கிளம்பி இருக்கிறது. அந்த வெப்பம்  பூமியை நோக்கி மணிக்கு 9 கோடியே 30 லட்சம் மைல் வேகத்தில் வந்தது.

இந்த வெப்பமானது பூமியை வந்தடையும்போது அதன் தீவிரம் எந்தளவுக்கு இருக்கும் என கணிக்க முடியவில்லை. சாதாரணமாக சூரியனின் வெப்பம்  நேரடியாக பூமியை தாக்காமல் பூமிக்கு மேலே உள்ள வாயு மண்டலங்கள் போர்வை போன்று  தடுக்கின்றன. இந்த வாயுக்களால் வெப்பம் உள்வாங்கப்பட்டு, பிறகுதான் குறைந்த அளவான வெப்பம் பூமியை வந்தடைகிறது.

பூமி வெப்பமயமாதலால் வாயுமண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தில் மிகப்பெரிய ஓட்டை விழுந்திருக்கிறது என்பதை நாம் முன்பே அறிந்திருக்கிறோம். இத்தகைய பல்வேறு அடுக்குகளைக் கொண்ட வாயுமண்டலம் காரணமாகவே சூரியனிடமிருந்து வரும் வெப்பத்தால் நாம் அதிகம் பாதிக்கபடாமல் இருக்கிறோம். இத்தகைய  வாயு மண்டலங்கள் சூரியப் புயலால் ஏற்பட்ட வெப்பத்தை தடுக்க முடியாவிட்டால் அது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

செயற்கோள்களை தாக்கும் சூரிய புயல்
பூமிக்கு மேல்பகுதியில் வாயு மண்டலத்தை தாண்டி ஏராளமான செயற்கை கோள்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இச் செயற்கைகோள் தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றன. சூரியனில் இருந்து வரும்  வெப்பம் செயற்கைகோள்களை தாக்குவதற்கு  அதிக வாய்ப்பு உள்ளது.

இதே போன்று, சூரியனில் ஏற்படும் மின்காந்த புயலின் தாக்கம் வரும் 2013-ல் அதிகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின் காந்த சூப்பர் புயல் ஒன்று பூமியை தாக்க உள்ளது. இதனால் தொடர்ச்சியாக பேரழிவு ஏற்பட்டு பூமி பாதிக்கும் நிலை ஏற்படும்.

எனவே அவசர சேவைகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மின்காந்த சூப்பர் புயல் குறித்து நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சூரியனின் மின்காந்த புயல் வரப்போகிறது என்று தெரியும். ஆனால், அதன் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பது தெரியாது. இதனால் செயற்கைக் கோள்கள்(Satellites), கப்பல்கள், விமானங்கள், வங்கிகள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கருவிகள், தொலைத் தொடர்பு கருவிகள் பாதிக்கப்பட்டு பெரிய பிரச்சினை ஏற்படும்.

சூரியப் புயலால் ஏற்படும் தாக்கத்தை குறிப்பிடும் படம்..

பெரிய நகரங்களில் மின் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பை சரி செய்வது கடினமானதாகவும், நீண்ட நாட்களும் ஆகும். சூரிய ஒளியில் மாற்றம் ஏற்படுவதால் மின்காந்த புயல், மின்னல் தாக்குவது போல் பூமியை தாக்கும் என்று நாசாவின் ஹீலியோ பிசிக்ஸ் பிரிவு டைரக்டர் விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் பிஷ்ஷர் கூறுகிறார்.

'விண் வெளி வானிலை' என்ற தலைப்பில் வாஷிங்டனில் சமீபத்தில் ஒரு மாநாடு நடந்தது. இதில் நாசா விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் சூரிய மின்காந்த புயல் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட விஞ்ஞானிகள் டாக்டர் பிஷ்ஷரின்(Scientist Richard Fisher) எச்சரிக்கையை ஏற்றுக் கொண்டனர். டாக்டர் பிஷ்ஷர் - Scientist Richard Fisher(69) சூரிய மின் காந்த புயல் குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார்.

இதுகுறித்து ரிச்சர்ட் பிஷ்ஷர்(Scientist Richard Fisher)..

22 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் மின் காந்த சக்தி அதிகமாக வெளிப்படுகிறது. பதினொரு ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் மின்காந்த புயல்(Magnetic storm) ஏற்படுகிறது. இது புள்ளிகள் அல்லது சுடரொளி போல் காணப்படுகிறது.

அப்போது சூரியனின் வெப்பம் மிக அதிகமாக 10 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட் (5,500 டிகிரி செல்சியஸ்) வெப்பம் அடையும். மனிதனின் வாழ்நாளில் இதுபோல் மூன்று, நான்கு முறை சூரிய புயல்(Solar storms) ஏற்படுவதை அறியலாம். வரும் 2013-ஆம் ஆண்டில் இரண்டு நிகழ்வுகளும் ஒன்று சேர்ந்து வர உள்ள தால் சூரியனில் இருந்து அதிகளவில் கதிரியக்கம்(Radiation) வெளிப்படும் வாய்ப்பு உள்ளது.

இதனால் வட ஐரோப்பா(Northern Europe) மற்றும் இங்கிலாந்தில் உள்ள மின்சக்தி நிலையங்கள் (Power stations)எளிதாக பாதிக்கப்பட்டு பல மாதங்கள் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடையும் சூழ்நிலை ஏற்படலாம். முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் பாதிப்பு எப்படி இருக்கும் என்று தெரியாததால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை இப்போதே கூற முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக