வியாழன், 25 ஜூலை, 2013

வெளிநாட்டில் வேலை செய்யும் ஒருவரின் வேதனைக் குரல்!

பள்ளிக்கூடம் போகும்வயதில் சுமையாகத் தெரிந்த படிப்பு எங்களுக்கு இப்போது படிப்பினையாக இருக்கும் போது வாழ்க்கைச் சுமைகளை இன்னும் சுமக்கின்றோம்.

நெஞ்சங்களில் படிக்க வேண்டிய வயதில் படிப்பைத் தவிர அனைத்திலும் ஆர்வம் கொண்டு அலைந்ததற்குத் தண்டனை என்று நினைத்துக் கொள்வதால் பாலைவனத்தில் உள்ள சுடு மணல் எங்களைச் சுடவில்லை.

வெயிலில் காசுக்காகப் போராடுகிறோம். கண்காணாத் தொலைவில் இருப்பதால் நாங்கள் சிந்தும் வியர்வை துளிகளை நீங்கள் காணமாட்டீர்கள்.

வாழ்க்கைப் பயணத்தின் பாதியை பாலைவனங்களில் முடிந்துக்கொண்டோம்.

மூட்டைப்பூச்சிகளுடன் இங்கு வாழும் நாங்கள் ஊருக்கு செல்லும் போது மட்டும் மூட்டை முடிச்சுகளுடன் செல்கிறோம் – குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்த...

இதே புலம்பல் தான் தினந்தோறும் அணையாமல் இருக்கும் அணையா விளக்கும் ஒரு நாள் அணையும் ஆனால் நாங்கள் இந்த அக்கினியில் அணையாமல் காலைப் பட்டினியால் தினம் தினம் சாகின்றோம் ஏனெனில் வேலைக்குப் போக வேண்டும் என்ற அவசரம் காலையில் சாப்பிட்டால் வேலைக்குச் செல்வதற்குரிய பேருந்து போய் விடும்...

குறிஞ்சி மலரானது பூக்கும்போது, அந்த இடமானது வசந்தமாக காட்சி தரும் அதுபோல் எங்களுக்கு ஒரு வசந்தம் பல வருடத்திற்கு ஒரு முறை விடுமுறைக்காகத்தாய் நாடு சென்றால் மட்டும் வாலிபங்கள் துள்ளும்.

வயதில் வசந்தத்தினைக் காணாமல் வானுயர்ந்த கட்டிடங்களை காணுகிறோம் நிமிர்ந்து பார்த்தால் விண்ணை முட்டும் கண்ணாடி மாளிகைகள் உடைந்து போன கண்ணாடி சில்களாய் கனவுகள் எங்கள் காலடியில்...

பாலைவனத்தில் மிக வேகமாக ஓடும் ஒட்டகம் அதிகச் சுமையின்றி நிதானமாக நிமிர்ந்து நடக்கிறது சுமைகளை இறக்கி வைக்க முடியாமல்
சுமந்துக்கொண்டு கூன் விழுந்து நடக்கிறோம் நாங்கள்...

சனி, 20 ஜூலை, 2013

வரலாற்றுக்கு முற்பட்ட ஆய்வுக்கான அகழ்வுகள்.

 
அகழ்வுப் பிரிவின் மூலம் இற்றைவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் வரலாற்றுக்கு முற்பட்ட மரபுரிமை இற்றைக்கு 125,000 ஆண்டுகளுக்கு முன் பரவிச் செல்கின்றது என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன்போது செம்மண், மணல் படிமங்கள் விரிவடைந்து சென்ற இலங்கையின் வடக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு கடற்பிரதேசம் மிகமுக்கியமானதாகும். 1972ஆம் ஆண்டில் புந்தல, பத்திராஜவெல ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளிலிருந்து வரலாற்றுக்கு முற்பட்ட மனித குடியேற்றத்திட்டங்களின் முக்கியமான இரண்டு காலகட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  1. மத்திய புராதன கற்காலத்திற்குரிய அதாவது, இற்றைக்கு சுமார் 125,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனித வர்க்கத்தினரால் பயன்படுத்தப்பட்ட கற்கருவிகள் கிடைத்துள்ளன. ஆனால் இங்கு மானிட எச்சங்கள் கிடைக்கவில்லை.
  2. இற்றைக்கு சுமார் 28,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலப்பகுதிக்குரிய மானிடக் குடியேற்றத்திட்ட காலகட்டம், இது மத்திய கற்காலத்திற்குரியதாகும். மானிடர்களின் அல்லது விலங்குகளின் எச்சங்கள் இல்லாவிட்டாலும்கூட கேத்திரகணித வடிவுடைய நுண்ணிய கற்கருவிகள் பெருந்தொகையாகக் கிடைத்துள்ளன.
அத்துடன் வரலாற்றுக்கு முற்பட்ட குகைகளில் நவீன மானிடர் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மானிடர் தொடர்பான சந்தேகமற்ற காரணிகள் குகை குடியேற்றத்திட்டங்கள் மூலமே கிடைக்கின்றன. இற்றைக்கு 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நவீன மானிடனின் வாழ்க்கை முறை, வித்தை முறைகள், தொழில்நுட்பம் போன்றவை பற்றிய விரிவான தகவல்கள் கிடைத்துள்ளன.
இவ்வாய்வுப் பணிகள் முதல் முறையாக 1979ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே மேற்கொள்ளப்பட்டன. அதன்போது மூன்று கற்குகைகள் அகழ்வுக்குட்படுத்தப்பட்டன.
  • குருவிட்ட பட்டதொம்ப குகை.
  • ஹொரண பாஹியன் குகை.
  • கேகாலை சாம்பல் குகை.
இவ்வகழ்வுக் கருத்திட்டங்களின் பெறுபேறுகள் கலாநிதி சிரான் தெரணியகல அவர்களின் "The Prehistory of Sri Lanka" மற்றும் கலாநிதி உக்கியக விஜயபால அவர்களின் "New light on the prehistory of Sri Lanka" ஆகிய நூல்களில் வெளியிடப்பட்டுள்ளன. அண்மையில் இத்தகவல்களை காலத்திருத்தம் செய்வதற்காக 2005ஆம் ஆண்டில் பட்டதொம்ப குகை, கித்துல்கல பெலி குகை, பெல்லன்பெந்தி பெலஸ்ஸ போன்ற இடங்களில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடர்பாக, குறிப்பாக கரையோர ஈரவலயத்தில் கற்குகைகள் சார்ந்த ப்ளயொஸ்டசீன காலம் முதல் மத்திய ஹொலசீன காலம் வரையில் வாழ்ந்த நவீன மானிடன் தொடர்பாக ஆய்வுத் தகவல்களை உள்ளடக்கி 2010ஆம் ஆண்டில் கலாநிதி நிமல் பெரேரா இங்கிலாந்தில் "Bar International Series" 2142ன் கீழ் "Prehistory of Sri Lanka" நூலை வெளியிட்டுள்ளார். இப்புதிய ஆய்வுகளின் பிரகாரம் இலங்கையில் குகை குடியேற்றத் திட்டம் இற்றைக்கு சுமார் 40,000 ஆண்டுகளுக்கப்பால் விரிந்து செல்கின்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் வறண்ட வலய மiழைக்காடுகள் இருந்தன என்பதற்கான காரணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தெற்காசியாவில் வாழ்ந்த ஆதிமனிதன் பற்றிய காரணிகளும் பட்டதொம்ப குகையிலும் பாஹியங்கல அருகிலும் கிடைத்திருக்கின்றன. இவ்வாதிகால மனிதனின் மிகச் சிறிய கற்கருவிகள் தொழில்நுட்பம், வித்தை முறைகள், உணவுப் பழக்கவழக்கங்கள் போன்றவை தொடர்பாக மிகமுக்கியமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
நவீன மானிடன் தொடர்பாகக் கலந்துரையாடுகின்ற போது ஆபிரிக்காவிலிருந்து வெளியேறல் கோட்பாட்டை தொல்பொருள் விஞ்ஞானிகள் மிக முக்கியமானதாகக் கருதுகின்றனர். இதன்போது சுமார் ஒரு இலட்சம் வருடங்களுக்கு முன்னர் நவீன மானிடன் ஆபிரிக்காவின் கிழக்கில் தோன்றி இற்றைக்குச் சுமார் 80,000 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாஹி குடா நாட்டின் ஊடாக ஒரு பகுதியினர் ஐரோப்பாவுக்கும் இன்னுமொரு பகுதியினர் ஆசியாவினூடாக அவுஸ்ரேலியாவுக்கும் விரிவடைந்து சென்றுள்ளனர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர். இதில் மிகமுக்கியமானது தெற்கு நுழைவுப்பாதை என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும். அதன்போது சீனாஹியிலிருந்து அரபிக் கரையோரமாக இலங்கை, மலேசியா, இந்தோனேசியா ஊடாக அவுஸ்ரேலியாவுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். அதன் பிரகாரம் நவீன மானிடனின் புராதன காரணிகள் தெற்காசியாவில் இலங்கையிலிருந்து கிடைத்துள்ளது.
இற்றைவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆய்வுகளின் பிரகாரம் இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தின் தகவல்கள் பல கருப்பொருட்களில் கிடைக்கின்றன.
  1. இரணமடு மண்ணை ஒழுங்குசெய்தல் - இவை வடக்கு, தெற்கு, வடமேல் கரையோரத்தில் விரிவடைந்திருக்கின்றது.
  2. கற்குகைகள் - நாடு முழுவதிலும் பரவலாக இருக்கின்ற அதேநேரத்தில் கரையோர ஈரவலயத்தின் தென்மேற்கு கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை போன்ற மாவட்டங்களில் மேலதிகமாகப் பரவிச் செல்வதைக் காணமுடிகிறது.
  3. வரலாற்றுக்கு முற்பட்ட திறந்த வெளி இடங்கள் - பெல்லன்பெந்தி பெலஸ்ஸ. இவ்விடம் 2005ஆம் ஆண்டில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் மூலம் இற்றைக்கு சுமார் 13,000 ஆண்டுகள் பழைமையானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  4. செந்நிற கபிலநிற மண்வலயம் - உலர் வலயத்தில் இயல்பாக இருக்கின்ற மண் வலயம். வரலாற்றுக்கு முற்பட்ட இடங்கள் இலட்சக்கணக்கில் விரிவடைந்துள்ளன. அநுராதபுர எத்துல் நுவர இற்றைக்கு சுமார் 5,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என இதன்போது விஞ்ஞான ரீதியாக காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  5. வரலாற்றுக்கு முற்பட்ட சிப்பி படிமம் - ஹூங்கம மினி எத்திலிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின்போது வரலாற்று காலத்திற்கு முற்பட்ட இவ்விடம் இற்றைக்கு சுமார் 2,800 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பது விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  6. மாதொட்ட - இலங்கையின் கற்காலத்தின் இறுதிக் காலப்பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இவ்விடம் இற்றைக்கு சுமார் 1,800 வருடங்கள் பழைமை வாய்ந்தது என விஞ்ஞான ரீதியாக காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கற்குகைகளின் தகவல்களைக் காலத்திருத்தம் செய்வதற்காக 2007ஆம் ஆண்டில் ஹொரண பாஹியன்கல அகழ்வு கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் அடிப்படை நோக்கம், 1986ஆம் ஆண்டில் கலாநிதி விஜயபால அவர்கள் மேற்கொண்ட அகழ்வு வேலையை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காலத்திருத்தம் செய்வதாகும். இதன்போது முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட 4 மண் படிநிலைகளை மிக நுணுக்கமாகப் பகுப்பாய்வு செய்ததை அடுத்து நூறு படி நிலைகளுக்கு மேல் அவை பரவிச் செல்கின்றன என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இக்கருத்திட்டம் ஸ்கொட்லாந்தின் ஸ்டாலின் பல்கலைக்கழகத்தின் தொல்புவிச்சரித பௌதிக பிரிவின் பேராசியர் இயன் சிம்சன் அவர்களின் ஆய்வு பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகின்றது. இதில் பின்வருவன அடங்குகின்றன.
  • நுணுக்கமான மண் பற்றிய ஆய்வு.
  • மெல்லிய மண் படிமங்களைப் பற்றிய பகுப்பாய்வு.
  • மகரந்தப் பகுப்பாய்வு.
  • மிகச் சிறிய கற்கருவிகள் பற்றிய ஆய்வு.
  • கற்கருவிகளின் உற்பத்தி தொழில்நுட்பம்.
  • விலங்கு எச்சங்களின் பகுப்பாய்வு.

வரலாற்றுக்கு முற்பட்ட ஆய்வுக்கான அகழ்வுகள்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்கும் வரலாற்றுக் காலத்துக்கும் இடைப்பட்ட காலம் இதுவாகும். இந்தக் காலம் முன்னேற்றமடைந்த கலாசார அம்சங்களைப் பிரதிபலிக்கின்றது. இக்காலத்தில் இலங்கையில் எழுத்து பயன்பாடு தொடர்பான காரணிகள் இல்லாவிட்டாலும்கூட முன்னேற்றகரமான மட்பாண்ட தொழில்நுட்பம், விலங்குகளைப் பழக்குதல், இரும்பு பயன்பாடு, தானியப் பயிர்ச்செய்கை போன்றவை தொடர்பான காரணிகள் கிடைக்கின்றன. இற்றைவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் இக்காலம் கி.மு. 1,300ல் ஆரம்பமாகி கி.மு. 250 வரை விரிவடைந்துள்ளது என்பது தெளிவானதாகும். இது வரலாற்றுக்கு முற்பட்ட இரும்பு யுகம் எனக் குறிப்பிடப்படுகின்ற அதே நேரத்தில் இதில் உள்ள சிறப்பம்சம் யாதெனில், மயான கலாசாரம் விரிவடைந்ததாகும். இந்த பிரபலமான கலாசார அம்சம் பொம்பரிப்பு, யாப்பஹூவ, கொக்அபே, யட்டிகல்பொத்த (கி.மு. 750) இப்பன்கட்டுவ (கி.மு. 700) கலோட்டுவா (கி.மு. 250) ரஞ்சாமடம (கி.மு. 1,300) ஆகிய அகழ்வு தொகுதிகளிலிருந்து தெரிய வந்துள்ளது. இம் மயான கலாசாரம் ஆரம்ப வரலாற்றுக் காலத்தின் இறுதிப் பகுதிவரையும் விரிவடைந்து சென்றுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

"முளைக்கும் விதை உரைக்கும் உண்மை "


மரமாக இருந்தாலும் செடியாக இருந்தாலும் அது உருவாக அடிப்படையாய் அமைவது விதை ஆகும் . அந்த விதையானது முளைக்கும் பொழுது கூர்ந்து கவனித்தால் ஆழமான வாழ்க்கைத் தத்துவத்தை அறியமுடியும் .

விதையை பூமியில் போட்டால் அது முளைக்கத் தொடங்கும் போது முதலில் வெளிவருவது அதன் வேர்ப்பகுதியாகும் . வேர்ப்பகுதி நன்கு மண்ணில் ஊன்றிய பிறகு இலைப்பகுதி மெல்ல மெல்ல நிமிந்து பின் வளரத் தொடங்கும் .

முதலில் தன்னை நிறுத்திக் கொள்ள வேர்ப்பகுதியை பூமியில் இறக்கிய பின்னர் தான் , எந்த தாவரமும் இலைப்பகுதியை வெளிப்படுத்தி பின் ஒவ்வொரு இலையாக வளர வளர வேர்ப்பகுதியையும் வளர்த்து பூமிக்குள் ஆழமாகவும் பரவலாகவும் செலுத்தி தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் .

அதேபோல் மனிதன் தான் வாழ்வில் வளர்ச்சியை தொடங்கும்போது , எடுத்தவுடன் உயரே வந்து விடவேண்டும் என்று முயலாமல் . முதலில் தன்னை எந்த ஒரு துறையிலும் ஆழப் பதியச்செய்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் . பின்னர் தான் வளர்ச்சியை படிப்படியாக உயர்த்திக் கொள்ள வேண்டும் .

ஒவ்வொரு கட்ட வளர்ச்சியின் போதும் தனது அடிப்படையை மேலும் மேலும் வலுவாக்கிக் கொள்ள வேண்டும் . செடியானது தனது வேரை ஆழமாகவும் பரவலாகவும் பதியச் செய்வது போல , தான் வளருவதற்கு ஏற்ப வளர்ச்சிக்கு அடிப்படையானவற்றை , அடிப்படையானவர்களை நம்மிடம் ஆழமாக பற்றுகொள்ளச் செய்ய வேண்டும் . அடிப்படை வலுவற்ற எந்த வளர்ச்சியும் நிலை பெறாது , நீடிக்காது . எனவே வளர்ச்சிக்கு முதல் கட்டம் அடிப்படையை முதலில் அமைப்பது தான் என்பதை ஆழமாக மனதில் கொண்டு செயல் பட வேண்டும் .

வியாழன், 18 ஜூலை, 2013

மாணவர்களின் சமூகம்சார் நடத்தை விருத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் சாதகமான சுற்றாடல் நிலமைகள்

 
  
மாணவர்களைப்பொருத்தவரை அவர்கள் பிள்ளைப்பருவம் மற்றும் கட்டிளமைப் பருவங்களுக்கு இடைப்பட்டவர்களா உள்ளனர். இத்தகைய இவர்களிடத்தில் பல்வேறு காரணிகள் சாதகமான மற்றும் பாதகமான தக்கங்களை எற்படுத்துகின்றன. இதற்கமைய சமூகம்சார் நடத்தை விருத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் சுழற்காரணிகளை அவதானிப்போமாயின்,

1.            பெற்றார்கள்
2.            முத்த சகோதர சகோதரிகள்
3.            சமவயதுக் குழுவினர்
4.            பாடசாலை
5.            சமயஇ சமூக நிறுவனங்கள்
6.            தனியார் கல்வி நிறுவனங்கள்இ வகுப்புக்கள்
7.            ஊடகங்களும் ஓய்வூ நேரங்களும்

ஒரு பிள்ளையின் ஆரம்ப செரல்வாக்குச் செலுத்தும் நிறுவனமாக குடும்பம் காணப்படுகின்றது. அங்கு பெற்றார்கள் மிகவூம் முக்கியமானவர்கள். அவர்களிடம் இருந்து குழந்தை ஆரம் கல்வியைப் பெற்றுக் கொள்கின்றது. அதன்போது பெற்றௌரது ஒத்துழைப்புக்கள் மிகுந்த தாக்கத்தைச் செலுத்துகின்றது. அடுத்தவர்களுக்கு உதவிசெய்யூம் மனப்பான்மையை பிள்ளைகள் வளர்த்துக் கொள்கிறார்கள். குடும்ப அங்கத்தவர்களிடம காணப்படும் அந்நியோன்யமான உறவூ காரணமாக குழந்தை அதனை தனது வாழ்வில் கடைபிடித்துக் கொள்கின்துடன். வளர்ந்துவிட்ட நிலையிலும் அக்குழந்தை சமூகத்தில் அடுத்தவரகளுடன் ஒற்றுமையாகவூம், உதவிகள் செய்தும்இ மற்றவர்களின் சுக துக்கங்களில் பங்குகொண்டும் இருப்பதற்கு இது காரணமாகின்றது.
                அடுத்து இங்கு காணப்படும் பாதுகாப்பு உணர்வூஇ ஒருவரை ஒருவர் பரிவூடன் நோக்கி அவர்களுக்கு எந்த ஆபத்துக்களும் வராமல் பாதுகாப்பார்கள். இந்த நிலையில் இதனை அவதானிக்கும் குழந்தை தன்னிடமும் இந்த பண்பை வளர்த்துக் கொள்கின்றது. அத்துடன் பெற்றார்கள் தங்களுக்கிடையில் நல்ல வார்த்தகளை பயன்படுத்தி கதைத்துக் கொள்ளும் பேHது அதனையே பிள்ளையூம் கைக் கொள்கின்றது. அது சிறந்த மொழிவளத்துக்கும் அடுத்தவர்கள் தன்னை நல்ல பிள்ளை என்று போற்றுவதற்கும் காரணமாகின்றது. ஒருவரது பேச்சைக் கொண்டு அவரை மட்டிடக்கூடிய நிலையில் சிறந்த பேச்சுவழக்கும் இருக்கும் போது அப்பிள்ளை சென்ற இடங்களிலும் தீய வார்த்தைகளை வெறுத்து நல்ல வார்த்தைகளை பயன்படுத்தவூம் இது காரணமாகின்றது.
                குழந்தைப்பருவம் முன்பிள்ளைப் பருவம் என்பன புலக்காட்சி வளர்ச்சிப் படியில் வேகமாக அபிவிருத்தி அடையூம் காலம் என உளவியலாளர்கள் கருதுகின்றனர். இந்த அடிப்படையில் குழந்தையின் வாழ்வில் நுண்மதி விருத்தி சம்பந்தமா அடிப்படை எண்ணக்கரு குடும்பத்தில் தான் உருவாகின்றது. குறிப்பாக இங்கு கவனிக்கப்படவேண்டிய முக்கயமான விடயம் தனது மூத்த சகோதர சகோதரிகளிமிருந்து உடலை சுத்தமாக வைத்திருக்க குளித்தல்இ போசனையன உணவூ பயன்பாடுஇ நித்திரை மற்றும் கழிவூப் பொருள் அகற்றுதல் போன்ற இன்னோரன்ன விடயங்களை பிள்ளை தனது குடும்பத்தில் இருந்த கற்றுக கொள்கின்றது.
                அடுத்து சமவயது குழுக்களுடைய தொடர்புகளினால் குடும்பத்தினால் கிடைக்காத பல விடயங்கள் கிடைக்கப் பெறுகின்றன. குறிப்பாக எதிர்பாலாரிடம் நடந்து கொள்வேண்டி கண்ணியமா முறை குறித்த அறிவைப் பெற்றுக் கொள்கிறார்கள். தனக்கு பொருத்தமான உடை அணிகலன்கள் யாது? எப்படி அமைத்துக் கொள்வது போன்ற விடயங்களை பிள்ளை அறிந்து கொள்கின்றது. இதன் போது அவர்கள் தனது மூத்த சகோதரர்களை பின்பற்றி தன்னை சிறந்த முறையில் ஒழுங்குபடுத்திக் கொள்கின்றனர். சமவயதுக் குழுக்களுடன் பழகும்போது இன்னுமொரு முக்கியமான செயற்பாடு புது சமூகத்துக்கான பாத்திரங்களையூம், குணநல் இயல்புகளையூம் பக்குவதாகும். இதன்மூலம் நல்ல பண்புகளை அடுத்தவர்களுக்குக் கடத்துவதுடன் அடுத்தவரிடமிருந்த நல்ல பண்புகளை கைக்கொள்ளவூம் முடியூமாகும். அத்துடன் ஒத்தவயதுக்குழு மூலம் கிடைக்கும் உதவி புதிய வலுவை உருவாக்கும். இதனால் மூத்தவர்களுடனான கொடுக்கள் வாங்கள்களின்போது முன்னரைவிடவூம் சுதந்திரமாகவூம், வலுவாகவூம் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிமாவதுடன், சுயகற்கை, சுய வலு, தன்னைப்பற்றிய தெளிவு, நம்பிக்கை என்பன வளர்வதற்கு ஏதவாகின்றது.
                பாடசாலை மாணவர்களின் சமூகம்சார் செயற்பாடுகளில் கூடுதல் பங்கு வகிக்கின்றது. இங்கிருந்துதான் மூத்த பரம்பறையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவூச் செல்வங்கள் இளைய தலைமுறைக்கு கடத்தப்படக் கூடிய இடமாகும். ஒருவன் ஒரு சூழலில் வாழ்வதாயின் அந்த சூழலின் தன்மைகள் பண்பாடுகள் அவனிடம் காணப்படவேண்டும் அப்படி இல்லாவிட்டால் அவனை அந்த சமூகம் ஏற்காது எனவே மாணவன் நாளை அவன் சமூகப்பிரானியாக வாழ்வதற்கு பாடசாலையின் மூத்த பரம்பறையின் வழிகாட்டல்கள் மிகவூம் முக்கியம் பெறுகின்றது. இங்குதான் சமூக மனப்பாங்குளும்இ வாழ்க்கைத் திறன்களும் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.
அவ்வாறே நல்ல பழக்க வழக்கங்களை பாடசாலை எற்படுத்துகின்றது. மாணவர்கள் வகுப்பறையைச் சுத்தம் செய்கிறார்கள்இ தினமும் பாடசாலை வளவை சுத்தம் செய்கிறார்கள். இதன்போது அவர்களிடம் பொதுச் சொத்துக்கள் குறித்த பெறுமதி வளர்கின்றதுடன் அவற்றை பாதுகாத்து இளைய தலைமுறையின்ருக்கு கொடுக்க வேண்டும் என்று மனோநிலை ஏற்படுகின்றது. அத்துடன் உயர்ந்த தாழ்ந்தஇ வசதியான வசதி குறைந்த பல மாணவர்களை ஒரு மாணவன் சந்திக் நேருகின்றான் அதன் போது தாழ்வான மாணவனை அல்லது வசதி குறைவான மாணவனை ஒதுக்கிவைக்காது சேர்ந்து நடக்கின்றனர். அவனுடன் ஒன்றான் இருந்து உணவூ உண்கின்றனர். அடுத்த மாணவன் பசியோடு இருக்கும்போது தான்மட்டும் உண்ணாமல் அவர்களையூம் சேர்த்துக் கொள்கின்றனர். இத்தகை பல நல்ல அம்சங்களை பாடசாலை ஒருவனுக்கு கொடுக்கின்றது.
சமய, சமூக நிறுவனங்களை அடுத்த மாணவனிடம் சதாகமான விளைவூகளை ஏற்படுத்தும் இடங்கலாகும். இந்த நிறுவனங்களுடன் மாணவர்கள் அதிகம் தொடர்பு வைக்கின்றனர். இங்கு நல்ல விடயங்கள் போதிக்கப்படுகின்றன. ஒரு மனிதனை நல்ல பண்பாடுகள் உடையவனாக மாற்றுவதில் இந்த நிறுவனங்களுக்கு மிகுந்த பங்கு இருக்கின்றது. ஏனெனில் இவை மனிதனது நம்பிக்கையூடன் இனைந்து செல்லக்கூடியவை. அங்கு கற்பிக்கப்படும் விடயங்களை மாணவர்கள் தனது வாழ்க்கையில் கடைபிடிக்கின்றார்கள். சமூக சேவைகள் ஏற்பாடு செய்ப்படுகின்றன அங்கு பெரியவர்கள் தமது நேரங்களை ஒதுக்கிவைத்துவிட்டு ஊதியம் எதுவூம் இன்றி தமது சிரமத்தை தானம் செய்கின்றனர். இதனை அப்படியே பின்பற்றும் இளைய தலைமுறை அல்லது மாணவர்கள் அவர்களும் இத்தகைய செயற்பHடுகளில் கூடுதலாக ஈடுபாடு காட்டுகின்றனர். இதனால் அவர்களிடையே பொது நோக்குஇ தன்னைப்போல் அடுத்தவரையூம் பார்க்கும் பரந்த மனப்பாங்கு வயர்ச்சியடைகின்றது.இந்த நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் மாணவர்களிடைய அடுத்தவரை மதித்தல், பொறுமை, ஒழுங்கமைக்கும் சக்தி மற்றும் தலைமைவகிக்கும் தன்மை, அடுத்தவர்களுடன் ஒத்துப்போகுதல் போன்ற பல நல்ல பண்புகள் மாணவர்களுள் குடிகொள்வதற்கு காரணமாகின்றது.
தனியார் கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை இன்னொரு மக்கிய சமூக அங்கமாக அது காணப்படுகின்றது. அங்கு மாணவர்கள் பல பிரதேசங்களில் இருந்தும் பல சமூக சூழ்நிலைகளில் இருந்தும் வருகைதருகின்றனர். இந்த நிறுவனங்கள் மாணவர்களிடையே போட்டித் தன்மையை வளர்க்கின்றது. இதன் மூலம் கல்வியில் ஆர்வம் செலுத்தும் தன்மை அதிகரிக்கின்றதுடன். மாணவர்கள் பாடசாலைக்கு மேலதிகமாக கல்வியைப் பெற்று தனது அறிவூ நிலையை விருத்தி செய்து கொள்கின்ற இடமாகவூம் இது காணப்படுகின்றது. மாணவர்களிடையே பல வித்தியாசமான நடையூடை, பழக்கவழக்கங்கள், பேச்சு, உணவூகள் ஏற்பட இது காரணமாகின்து. இதனால் மாணவரகளுக்கு அடுத்தவர்களது தன்மைகளை புரிந்து கொள்வதற்கும்இ வித்தியாசங்களை அனுசரித்து நடந்து கொள்வதற்கும் முக்கிய சந்தர்ப்பமாகின்றது. இந்த நிறுவனங்களுக்கு அதிகமாக வருபவர்கள் மத்திய வகுப்பினராக இருப்பதனால் மத்திய வகுப்பினரது சமூக இயல்புகள் பரவூவதற்கும் காரணமாகின்றது. பாடசாலைகளில் அடங்கியிருப்பதனால் தனது இயல்புகளை வெளிக்காட்ட முடியாதவர்கள் துணிந்த செயற்படவூம் குழுக்களுக்கு தலைமை தாங்கவூம் சந்தர்ப்பம் அமைகின்றது.
மாணவர்கள் தமது ஓய்வூ நேரங்களை இன்பமாகக் கழிப்பதில் கூடிய கவனம் செலுத்துவார்கள். இதன்போது அவர்கள் இணையம், தொலைக்காட்சி பார்த்தல், விளையாடுதல், பத்திரிகை போன்ற விடயங்களில் ஈடுபடுகின்றனர். அதிலும் கணினி, தொலைக்காட்சி போன்ற வற்றில் அவர்கள் அதிகநேரத்தை செலவிடுகின்றர். அதில் காட்சிப்படுத்தப்படுபவற்றை அவர்கள் பின்பற்றுகின்றனர். இதன் மூலம் சர்வதேச கலாசாரங்களை அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். மாற்றமுறும் உலக நிலைகளை அறிந்து அதற்கேற்ப தன்னை தயார்செய்து கொள்ளக்கூடியவர்களாக மாறுகிறனர். இணையத்தின் மூலம் பலருடன் தொடர்பு கொள்ளக்கூடிய வசதி ஏற்படுகின்றது. புதிய அறிவூகளை உடனுக்குடன் அறிந்து அதனை பிரயோகிக்க கற்றுக் கொள்கிறார்கள். தனது கருத்துக்களை பயமினிறி தெரிவிக்கக் கூடிய இடமாக இணையம் இன்று காணப்படுகின்றது. பல நல்ல நபர்களுடைய நேரடி உறவினால் மாணவர்கள் தனது மனப்பாங்குகளை சிறந்த முறையில் அமைத்துக் கொள்வதற்கு வழிஏற்படுகின்றது. அத்தகைய முன்மாதிரிகளை தானும் பின்னபற்றி எதிர்காலத்தில் அத்தகைய பிரபலங்களாக, உலகுக்குப் பிரயோசனம் உடையவர்களாக அவர்களும் தங்களை மாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்யக்கூடியவர்களாக மாறுவார்கள். பத்திரகை சஞ்சிககையைப பொறுத்தரையூம் இதே நிலைப்பாடுகளுக்கு மாணர்கள் வருவார்கள். அங்கு அவர்களிடம் வாசிப்புத்துறை வளர்வதற்கும் பாத்திரிகைகளுக்கு எழுதுவதன் மூலம் எழுத்துத்துறை வளர்ச்சியடைவதோடு அறிவூம் வளர்வதற்கு அது காரணமாகின்றது.